search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குன்றத்தூர் கொலை"

    குன்றத்தூரில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட மகனை தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    பூந்தமல்லி:

    குன்றத்தூர் மாணிக்கவாசகர் நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் (69). இவருக்கு 2 மகன்கள். ஒரு மகள். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது.

    பாண்டியன் தனது மகன்கள், மருமகள்களுடன் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்.

    ஒரு மகன் நாகராஜ் (28). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு 1½ வயதில் ஒரு குழந்தையும், 40 நாட்களில் ஒரு கைக்குழந்தையும் உள்ளன.

    நாகராஜனுக்கு குடிப்பழக்கம் உண்டு. சம்பவத்தன்று நாகராஜ் குடித்து விட்டு வந்து தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

    அதை பார்த்து கொண்டிருந்த கணேசன் தனது மகனை கண்டித்துள்ளார்.

    இதையடுத்து கணவன்- மனைவிக்குள் நடந்த சண்டை தந்தை-மகனுக்குள் தொடங்கியது. அப்போது ஆத்திரம் அடைந்த பாண்டியன் அங்கு இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து மகனை குத்தி இருக்கிறார். இதில் பலத்த காயம் அடைந்த நாகராஜ் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியனை கைது செய்தனர்.
    குன்றத்தூர் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் வாக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலம் அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மகன் தீபக்ராஜ் (25).

    குன்றத்தூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் தீபக்ராஜ் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 15-ந்தேதி நண்பர் ஒருவரின் திருமணத்துக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றார்.

    அதன்பிறகு தீபக்ராஜ் வீடு திரும்பவில்லை. தெரிந்தவர்களிடம் விசாரித்து பார்த்தும் அவர் நிலை என்ன என்பது தெரியவில்லை.

    இதையடுத்து, தனது மகனை காணவில்லை என்று குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் பாஸ்கர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தீபக்ராஜை தேடி வந்தனர்.

    பல்வேறு இடங்களில் தேடியும் பயன் இல்லை. இந்த நிலையில் தாம்பரம் அருகே முள்புதரில் ஒரு வாலிபர் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் அங்கு சென்ற பார்த்தனர். அப்போது, தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரத்தில் தீபக்ராஜ் வெட்டுக் காயங்களுடன் ஒரு முள்புதரில் பிணமாக கிடந்தார்.

    அவரை யாரோ சரமாரியாக வெட்டி கொலை செய்து இருப்பது தெரிய வந்தது. உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது.

    பெட்ரோல் பங்க் ஊழியர் தீபக்ராஜ் கொலை செய்யப்பட்டதற்கு முன் விரோதம் காரணமா? காதல் விவகாரமா? அல்லது வேறு காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

    அவரை கொலை செய்தது யார்? ஏற்கனவே அறிமுகமானவர்களா? அல்லது மர்ம கும்பல் கடத்திச் சென்று கொன்றதா என்பது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வீடியோகாலில் கள்ளக்காதலனுடன் நீண்ட நேர உரையாடிய கொலைகாரி அபிராமி, குறும்பு செய்த குழந்தைகளை சைக்கோ போல் துன்புறுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #KundrathurAbirami
    சென்னை:

    குன்றத்தூரைச் சேர்ந்த வங்கி ஊழியர் விஜயின் மனைவி அபிராமி (25). தனது 2 குழந்தைகளை பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து கொலை செய்த குற்றத்துக்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    அவருடன் கள்ளக்காதலன் சுந்தரம் (28) என்பவரும் கைதாகியுள்ளார். இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கள்ளக்காதலுக்காக ஒரு பெண் தனது 2 குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரக்கமுள்ள தாய் என்றால் பெற்ற குழந்தைகளை கொலை செய்ய மனம் வராது. ஆனால் அபிராமி தனது 2 குழந்தைகள் மீது வெறுப்புடன் இருந்ததால் தான் கொலை செய்யும் அளவுக்கு துணிந்து இருப்பதாக போலீசார் சந்தேகப்பட்டு அபிராமியின் நடவடிக்கைகள் குறித்து விசாரித்தனர்.

    அப்போது அபிராமி செல்போனுக்கு அடிமையானவர் என தெரியவந்தது. எப்போதும் செல்போனிலேயே மூழ்கி இருப்பார். படித்த முகவசீகரமான அபிராமி தன்னைத்தானே செல்போனில் படம் பிடித்து அழகுபார்ப்பார். ‘டப்ஸ் மாஸ்’ என்ற செயலி (ஆப்) செல்போனில் பிரபலமாகி வருகிறது.

    அதில் சினிமா வசனங்களுக்கு ஏற்பவும், பாடல்களுக்கு ஏற்பவும் நாம் பேசுவது, பாடுவது போல் பாவனை செய்து கொள்ளலாம். இன்றைய இளம் தலைமுறையினர் ‘டப்ஸ் மாஸ்’ பாவனையை மிகவும் ரசிப்பதுடன் அதை மற்றவர்களுக்கும் அனுப்பி மகிழ்கிறார்கள்.

    அபிராமியின் செல்போனை போலீசார் ஆராய்ந்த போது அவர் ‘டப்ஸ்மாஸ்’ அடிமை என தெரியவந்தது. அவர் தனது கள்ளக்காதலனுடன் வீடியோ காலில் நீண்ட நேரம் பேசி இருக்கிறார். அதில் ஒரு பகுதியை ‘டப்ஸ்மாஸ்’ ஆக மாற்றி தனது செல்போனில் சேமித்து வைத்து இருக்கிறார்.

    இதே போல் குழந்தைகளையும் பேச வைத்து இருக்கிறாள். இதில் குழந்தைகளும் அடிமைகளாகி தாய் பேசும் போது அவர்களும் குறுக்கே புகுந்து இடையூறு செய்து இருக்கிறார்கள்.

    இதனால் எரிச்சல் அடைந்து அபிராமி தனது குழந்தைகளை சத்தம் போட்டு மிரட்டுவாள். பல சமயம் பக்கத்து வீடுகளுக்கு கேட்கும் அளவுக்கு அவள் குழந்தைகளை சைக்கோ போல் கோபத்தின் எல்லைக்கே சென்று அடித்து அழ வைத்திருக்கிறார்.

    குழந்தைகளின் அழுகை சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் அபிராமிக்கு அறிவுரை கூறியிருக்கிறார்கள்.

    இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, அபிராமி தனது காதலனுடன் வீடியோகால் மூலம் அடிக்கடி பேசியிருக்கிறார். அதை அவர் தனது செல்போனில் பதிவு செய்தும் வைத்து இருக்கிறார். கணவர் வேலைக்கு சென்றபின் அவர் எப்போதும் செல்போனிலேயே மூழ்கி இருப்பது தெரிய வந்தது.

    அவர் கள்ளக்காதலனுடன் வீடியோவில் பேசும் போது, குழந்தைகள் குறுக்கிட்டால் அவர்களை கடுமையாக தாக்குவாள். அந்த அளவுக்கு கள்ளக்காதல் அவரை மாற்றி இருக்கிறது. ஒருமுறை குழந்தைகளை அவர் அடிப்பது குறித்து பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசிலும் புகார் செய்து இருக்கிறார்கள்.

    எப்போதும் தன்னைப் பிரபலப்படுத்திக் காட்ட நினைக்கும் அபிராமி தனது 2 குழந்தைகளை கொன்று அனைவரது கவனத்தை ஈர்த்து இருக்கிறார். இதுவும் ஒருவகையான சைக்கோத்தனம் தான் என்று தெரிவித்தனர். #KundrathurAbirami
    குன்றத்தூரில் 2 குழந்தைகளை கொன்ற தாய் அபிராமியின் டப் மாஷ் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோக்களை பார்த்த பலரும் அபிராமியை திட்டி தீர்க்கின்றனர். #KundrathurAbirami
    சென்னை:

    பெற்ற குழந்தைகளுக்கு பாலில் வி‌ஷம் கலந்து கொல்ல எப்படித்தான் மனம் வந்ததோ...? இந்த பாதகத்திக்கு என்று குன்றத்தூரில் 2 குழந்தைகளை கொன்ற அபிராமியை அனைவரும் திட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இதுதொடர்பாக பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கொந்தளிப்புடன் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அபிராமி உற்சாகத்தோடு காதல் மொழி வசனம் பேசி வெளியிட்ட ‘டப் மாஷ்’ வீடியோக்கள் இப்போது வெளியாகி எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

    என்ன இந்த குரு... குரு... பார்வை என்று தொடங்கும் வீடியோவின் முடிவில் பேசும் ஆணின் குரல் இப்படி ஒலிக்கிறது. ஒருநாள் உனக்கு பஞ்சராகப் போகுது என்று ஆண் ஒருவர் அபிராமியை பார்த்து எச்சரிக்கிறார்.

    இன்னொரு வீடியோவில் அபிராமியிடம் வாலிபர் ஒருவர் ஐலவ்யூ கூறுவது போலவும்... எனக்கு உன்னை புடிக்கல, நீ எனக்கு அண்ணன் மாதிரி என்று அதற்கு அவர் பதில் கூறுவது போலவும் காட்சிகள் உள்ளன.

    உனக்கு என்னடா மரியாதை, புறம்போக்கு... டால்டா.. என்று வடிவேலுவை பார்த்து கதாநாயகி பேசும் வசனம் மிகவும் பிரபலம். அதுபோன்ற வீடியோவையும் அபிராமி வெளியிட்டுள்ளார்.

    என்னவளே... என்னவளே... எங்கிருக்கிறாய் நீதான் என்ற பாடலில் கண்களை மூடிவிட்டு ஒளிந்ததும் நீதான் என்ற பாடலில்...

    அருகில் வந்து அணைப்பதும், நீதான் என்று தான் பாடுவது போன்ற வீடியோவை அபிராமி வெளியிட்டுள்ளார்.

    இந்த வீடியோக்களில் அபிராமி கண்களை சிமிட்டி, உதட்டை கடித்து, சினிமா கதாநாயகியை போல நன்றாக நடித்துள்ளார்.

    இந்த வீடியோக்களை பார்த்தவர்கள் அபிராமியை மீண்டும் வசைபாட தொடங்கி உள்ளனர்.
    குன்றத்தூர் அருகே 2 குழந்தைகளுக்கு தாயே வி‌ஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Kundrathur
    பூந்தமல்லி:

    குன்றத்தூரை அடுத்த மூன்றாம் கட்டளை அகஸ்தீஸ்வர் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய்(30).

    சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி அபிராமி(25).

    இவர்களுக்கு அஜய்(6) என்ற மகன், காருணிகா(4) என்ற மகள் உள்ளனர். மகன் அஜய் குன்றத்தூரில் உள்ள பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தான்.

    உடனே முடிக்க வேண்டிய வேலை அதிகம் இருந்ததால், விஜய் நேற்று இரவு வங்கியிலேயே தங்கி விட்டார். இன்று காலை வீடு திரும்பினார்.

    வீட்டின் முன்கதவு வெளியே தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. கதவை திறந்து கொண்டு உள்ளே சென்ற விஜய்க்கு அதிர்ச்சி காத்து இருந்தது. குழந்தைகள் 2 பேரும் வாயில் நுரை தள்ளியபடி படுக்கையில் கிடந்தனர்.

    அருகில் சென்று பார்த்த போது, 2 குழந்தைகளும் வி‌ஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. குழந்தைகளின் உடல்களை கண்டு விஜய் கதறி அழுதார்.

    மனைவியை தேடிய போது வீட்டில் இல்லை. இது குறித்து குன்றத்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர்.

    விசாரணையில் விஜய்யின் மனைவி அபிராமி குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு, தப்பி இருப்பது தெரிய வந்தது. இதற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை.

    விஜய் குடும்பத்துடன் குடியிருக்கும் மாடி வீடு.

    விஜய் குடும்பத்துடன் குடியிருப்பது மாடி வீடு. வீட்டின் உரிமையாளர் கீழ் வீட்டில் வசித்து வருகிறார். அபிராமி எப்போது வீட்டில் இருந்து வெளியே சென்றார்? எங்கு சென்றார்? குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்தது ஏன்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குழந்தைகளுக்கு தாயே வி‌ஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விஜய்யின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி. சென்னை வங்கியில் அவருக்கு வேலை கிடைத்ததால் குடும்பத்துடன் மூன்றாம் கட்டளையில் குடியிருந்தார்.

    மாயமான அபிராமியை பிடிக்க போலீசார் 2 தனிப்படை அமைத்துள்ளனர். விசாரணையில் அபிராமிக்கும் அருகில் உள்ள பிரியாணி கடை அதிபருக்கும் பழக்கம் இருந்ததாக தெரிய வந்துள்ளது.

    பிரியாணி கடை அதி பரும் தலைமறைவாகி விட்டார். எனவே குழந்தைகள் கொலைக்கு இருவரின் தவறான தொடர்பு காரணமாக இருந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள். தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. #Kundrathur
    வீட்டில் தூங்கிய ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குன்றத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பூந்தமல்லி:

    குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கம், பாரதி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 48). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தேவி. கட்டிட தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    ராஜேந்திரனுக்கு குடிப்பழக்கம் உண்டு. நேற்று காலை மது போதையில் இருந்த அவர் ஆட்டோ ஓட்டச் செல்லாமல் வீட்டிலேயே தூங்கினார்.

    இதையடுத்து தேவி உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இரவு திரும்பி வந்தபோது வீட்டில் உள்ள அறையில் கணவர் ராஜேந்திரன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது தலையில் கல் போடப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து குன்றத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கொலை நடந்த போது ராஜேந்திரனின் மகள் அருகில் உள்ள பாட்டி வீட்டுக்கும், மகன் பக்கத்து வீட்டில் உள்ள சிறுவர்களிடம் விளையாடவும் சென்றுவிட்டனர். இதனால் கொலையாளிகள் வீட்டுக்கு வந்து சென்றது எப்போது என்று தெரியவில்லை.

    கொலையுண்ட ராஜேந்திரனின் முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அவர் தேவியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இதே போல் தேவியும் முதல் கணவரை பிரிந்து ராஜேந்திரனை இரண்டாவதாக திருமணம் செய்து இருந்தார்.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று உடனடியாக தெரியவில்ல. பெண் தகராறில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதுதொடர்பாக தேவியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவரை பிடிக்க விரைந்துள்ளனர்.


    ×